உங்கள் ஆசிரியரை தெரிந்துகொள்ளுங்கள்

 

ஸ்ரீ சௌந்தர் திலிபன் பாரத்மார்க்கின் நிறுவனர் மற்றும் ஆசிரியர் ஆவார். பாரத் மார்க் உலகம் முழுவதும் சனாதன் தர்மப் பிராச்சரில் ஈடுபட்டுள்ளது. கனடாவின் டொராண்டோவிலிருந்து பாரத்மார்க் இயங்குகிறது. ஸ்ரீ சௌந்தர் திலிபன் பாரத்தில் உள்ள தமிழ்நாட்டின் தெற்குப் பகுதியில் பிறந்து வளர்ந்தவர். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்துள்ள இவர் தற்சமயம் கனடாவின் டொரோண்டோ மாநகரில் வாழ்ந்து வருகிறார்.

பத்து வருடங்களுக்கு மேல் அமெரிக்காவின் வெர்ஜினியாவில் வசித்து வந்த இவர், அங்கு தனது சொந்த மென்பொருள் நிறுவனத்தைத் தொடங்குவதற்கு முன்பு மென்பொருள் பொறியாளராக பணியாற்றினார். 2005 ஆம் ஆண்டின் இறுதியில், அவர் தனது மென்பொருள் நிறுவனமான Netultimate.com ஐ கனடாவுக்கு மாற்றி விரிவுபடுத்தினார். இந்த நிறுவனம் வெப் டெவெலபேமெண்ட், டிசைனிங் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஆகியவற்றைச் செய்து கனடாவின் டொராண்டோவிலிருந்து செயல்படத் தொடங்கியது. அவர் கனடா மற்றும் அமெரிக்காவில் உள்ள பல இந்து தேசியவாத குழுக்களுடன் பணியாற்றுகிறார் மற்றும் சமூக சேவையில் விரிவாக ஈடுபட்டுள்ளார். அவர் ஒரு தசாப்த காலமாக அமெரிக்காவில் வசித்து வந்தார், அங்கு தனது சொந்த மென்பொருள் நிறுவனத்தைத் தொடங்குவதற்கு முன்பு மென்பொருள் பொறியாளராக பணியாற்றினார். 2005 ஆம் ஆண்டின் இறுதியில் அவர் தனது வணிகத்தை கனடாவிற்கு விரிவுபடுத்தி கனடாவின் டொராண்டோவிலிருந்து செயல்படுகிறது . அவர் கனடா மற்றும் அமெரிக்காவில் உள்ள பல இந்து தேசியவாத குழுக்களுடன் பணியாற்றுகிறார் மற்றும் சமூக சேவையில் விரிவாக ஈடுபட்டுள்ளார்.

உலகெங்கிலும் உள்ள சனாதன தர்மிகளுக்கு தார்மிக வாழ்கை நடத்த உதவுவதோடு, பாரதத்தின் உண்மையான வரலாற்றைப் பற்றி இளைஞர்களுக்கும் பெரியவர்களுக்கும் ஆங்கிலத்தில் பரப்புவதற்கு அவர் பாரத்மார்க்கை 2017 இல் தொடங்கினார். தற்போது பரத்மார்க் உலகம் முழுவதும் பெரும் பார்வையாளர்களைக் கொண்டுள்ளது, இப்போது அது இந்தி மற்றும் தமிழிலும் (தமிழில் http://canadauthayan.ca/) தனது சேவையை விரிவுபடுத்தியுள்ளது.

பாரதத்தின் மறைக்கப்பட்ட வரலாறு, பல்வேறு குருக்களின் போதனைகள், கோயில் வரலாறுகள் மற்றும் இந்து-எதிர்ப்பு மற்றும் தேச விரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்துகின்றது பாரத்மார்க். சிறந்த தர்ம தலைவர்கள், சமூகத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் போன்றவர்களை நேர்காணல்களையும் நீங்கள் பாரத் மார்கில் காணலாம்.

சனாதன தர்மத்திலிருந்து வெளியேறியவர்களை ஹோமம் / ஹவன் / யாகம் செய்வதன் மூலம் திரும்பக் கொண்டுவருவதிலும், மக்களுக்கு புதிய பெயர்களைக் கொடுப்பதிலும் பரத்மார்க் ஈடுபட்டுள்ளது. பரத்மார்க் இன்று வரவிருக்கும் தர்மிக-திருவிழாக்களைப் பற்றி மக்களுக்குக் அறிவிப்பதோடு எந்தவொரு கேள்விகளையும் / சந்தேகங்களையும் பதில்கூறி உதவுவதை சேவையாக செய்து வருகின்றது.

இன்று பரத்மார்க் கோசாலைகள், அன்ன தானம் (உணவு நன்கொடைகள்) ஆகியவற்றையும், அதனுடன் தொடர்புடைய அமைப்புகளின் மூலம் ஏழை மாணவர்களுக்கு ஆடை மற்றும் கல்வியை வழங்குவதிலும் ஈடுபட்டுள்ளது.

நீங்கள் தற்சமயம் வாட்ஸாப் நம்பர் மூலமாக ஆசிரியருடன் எப்போதும் தொடர்புகொள்ளலாம். “தினமொரு தார்மிக செய்தி ” உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், வூர் விவரத்துடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப்பில் அனுப்புங்கள். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலெக்ராம்” (Telegram APP ) சானலில் இணைந்தும் தார்மிக செய்தியை தமிழில் படித்து மகிழலாம்